Monday, April 5, 2010

இட ஒதுக்கீடு எங்கள் பங்கீடு

எம் மண்ணில் எம் பங்கீட்டை தர மறுக்கும்
ஆச்சார்யா நீ செத்து பொணம் போகும் நாள்
எங்களாலேயே தீர்மானிக்கப்படும்
பல்கலைக்கழக வளாகத்தில் வெடித்து கிளம்பிய
பறையின் அதிர்வு சாவுச்சத்தத்தின் பிறம்படி
பழைய பேன்ட், சட்டைக்குள் புகுந்துக்கொண்ட
பட்டாச்சார்யாவை பிணஊர்வலமாய் தூக்கிச் செல்ல
அவன் துணை வேந்தன் திமிரோடு
அவன் பிணத்தை அவனே பார்த்தான்
ஊர்வலத்தின் முடிவில் நாயின் பிணத்தை
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி
நெருப்பாய் நடந்த நாங்கள்
இன்னும் நெடுந்தூரம் நடக்க வேண்டியதும்
சமுக நீதியை கொள்ளுகிற நாய்களின் சவத்துக்கு
பாடை கட்டுவதுமாய் நகர்கிறது நாட்கள்

1 comment: