நான் சுற்றித் திரிந்த பூமி
என் கைக்குள் அடக்க நினைத்த வானம்
இந்த குறுகிய சந்துக்குள்தான்
ஏதோ ஒரு மூலையில் நீ முடங்கி கிடக்கிறாய்
நீ இருக்கும் அந்த பாலைவனத்தின்
இந்த புறம் கண்சிமிட்ட முடியாத பூச்சோலை
வரலாற்றில் அது சேரியாய் போனது
நான் பிரமித்து நடக்கும் இந்த சேரிமண்
ரத்த உறவின் கதைகளைச் சொல்லும்
அதுக்குள் வெந்து புழுங்கும்
ரத்தக்கசிவின் பாடல்களை முனுங்கும்
வாய் கதறி அழும்
அடிமைகளின் வரலாற்றை சொல்லும்
இந்த வெப்பத்தின் மீதே இந்த பூச்சோலை
வானத்தை நோக்கி எரிகிறது !




















No comments:
Post a Comment