Tuesday, April 13, 2010

கருக்கலின் நீளத்தில் நிகழ்ந்து முடிந்துவிடும் அவை

தொடமுடியா வானம் பறிகொடுத்த நட்சத்திரங்களை
பிடுங்கும் முன் உன் கண்களை மூடிய என் கைவிரல்கள்
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்
உன் ஆர்ப்பரிக்கும் உதடு
தொட்டதை விடாதபடி
என் இடுப்பை இறுக்கி அணைக்கும் உன் கைகள்
ஆறடி பள்ளத்துக்குள்ளும் ஆடை களைந்த உன்னை
நிலவு பார்த்திடாதபடி போர்த்திய என் உடல்
உன் முடிகளை கோதியபடியும் இறுக்கி பிடித்தபடியும்
தடுமாறாமல் தடம்மாறாமல்
உன் உதட்டை அழுத்தி முத்தமிடும் என் உதடு
துடிப்பின் உச்சத்தில் பின்னும் நம் கால்கள்
எந்த தடையுமற்று என்
இரத்தத்துளிகளை சுகமாய் பெற்று
நீ விடும் பெரும் மூச்சு
தடைகளற்ற புணர்ச்சியில் தடையிடும் சாதி
மரணமுறும் நாட்கள் நெடுந்தொலைவிலில்லை
அப்பொழுது பசுமையின் வார்ப்பில்
நாம் புனிதப்பட்டுக்கொள்வதற்கு ஏதும் இல்லை

No comments:

Post a Comment