Monday, April 5, 2010

குண்டு வாத்தியார்

அடிவானத்தில் பறக்கும் விமானத்தை
துள்ளிப்பிடித்த சுகம்
பல்பத்தை தொலைத்து
பேனாவை பிடித்த போது !
எல்லாமே மண்ணோடு மக்கிபோகும்
வெள்ளையும் சொல்லையும்
பேருக்காய் வாத்தியாய்ப்போன
தூங்கு மூஞ்சி சொல்லும்
"பறையனுக்கு பொறந்தது
என்னமா படிக்குது!"

No comments:

Post a Comment