Friday, April 23, 2010

ரகசிய கூட்டமொன்றில் திரைமறைவு உரைகள்

ஏற்கனவே அவர்கள் கழுவில் ஏற்றப்பட்டவர்கள்
கூர்முனை செதுக்கப்பட்ட சிலுவையில்
அவர்களை கழுவில் ஏத்திவிட்டு
நாம் மட்டும் கூடி
கொள்ளையடித்ததை பங்குபோட்டுக்கொள்ளலாம்

அப்பத்தை பிட்டு கையில் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளலாம்
ஆலய மணியோசையில் சரணமடையும் அவர்கள்
மண்டியிட்டு கண்மூடும் நொடியில் கடத்திவிடலாம்
காட்டிக்கொடுத்துவிடாது நம் வெள்ளை அங்கிகள்

ஏசுநாதரின் ரத்தத்தைவிட சிலுவையில்
அதிகமாய் சிந்தி கிடக்கிறது அவர்களின் ரத்தம்
நீர் ஊற்றி கழுவிவிடலாம் புனிதப்பூசையின் வாசத்தில்
பல்லை காட்டி நிற்கும் சிலுவை

No comments:

Post a Comment