Saturday, April 3, 2010

மீட்கப்படும் என் பூர்வ வரலாறு




பெரும்புதருக்குள் சிக்கிக்கொண்ட

உன்னை மீட்பதெப்படி
முள்ளில் சிக்கிக்கொள்ளாதபடி
நகரும் என் கைகள்
இறைச்சியை புறந்தள்ளி அதன் ரத்தத்தில் உருவான
நெய் வாசணையோடு வெப்பக் காற்றின் கரங்கள்
முதுகில் தட்டி முள்ளுக்குள் என்னையும் தள்ளி
இன்னொரு கொலை முயற்சி
காயம்பட்ட வலியோடு அவனோடு கைகோர்க்கிறேன்
உறைந்து காய்ந்த அவன் ரத்தம் உறைகின்ற என் ரத்தம்
சந்திக்கும் நொடி மூச்சுக்குழல் நின்று தொடங்கும்
அந்த அடர்ந்த முட்புதருக்குள்
எனக்கும் முன்பாக தள்ளிவிடப்பட்டவன் அவன்
அவனை மீட்பதில் எனக்கும் என்னை மீட்பதில்
அவனுக்கும் ஒரு பரஸ்பர உடன்பாடு
பழி வாங்கும் குணமற்று
கொடியவனின் எலும்பை முறிக்கும் தத்துவத்தை மட்டும்
அவன் மூளையின் சேகரிப்பில்
அகராதிகளில் நிரம்பியிருக்கும் வார்த்தைகளாய்
அடுக்குத்தேன் போல சொல்ல முடியா சுவையுடன்
ஈரம் படர்ந்த காற்றில் பரவுகிறது

No comments:

Post a Comment