
அசோக வனத்தின் ஒத்தையடிப் பாதையில்
தடத்தை மறைத்த
காய்ந்த சருகின் மீது உதிர்ந்த
நீலநிற இலைகளின் மீதே
மனம் அசைபோட்டு நடக்கிறது
வனம் நிறைந்த புத்தர் சிலைகள்
மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு
சாம்பல் கூட அப்பப்பட்டு
ஏதும் அறியாத அப்பாவி குழந்தையாய்
விக்கி அழுகிறது
வனம் நிறைந்த சத்தம்
உன் மலட்டுச் செவியில் கேட்கப்போவதில்லை
மூத்திரம் போகும் நேரத்தில்
காதில் சுற்றிக்கொள்ளும்
பூநூலிடமிருந்து அறுபட்டுபோகாமல்
உன் காதை பத்திரமாகப் பார்த்துக்கொள்
இந்த தேசத்திற்கு
மலட்டுச் செவியின்
அடையாளச் சின்னம் தேவைப்படுகிறது !
No comments:
Post a Comment