Wednesday, April 7, 2010

அடைகாக்கப்படும் என் மௌனம் உடைக்கப்படுகிறது உன்னால்


காத்தவராயன் கையில் கத்தி பார்த்து பழகி
என்னை மிதிக்கும் உன் கொட்டங்களின்
வாலை ஒட்ட அறுத்து தொரத்தும் என் துடிப்பு
நாளை வரைக்கும் பாதுகாக்கப்படும்
வெட்டிய வால் முளைவிடாதபடி
இறுக்கி அடிக்கப்படும் ஆப்பு
என் அமைதியை சீர்குலைக்கும் நீ
மறந்துவிடுகிறாய் எனக்கும் கொஞ்சம் கோபம் வரும்
என் மௌனத்தை உடைப்பதில் நீயும்
உன் வாயை உடைப்பதில் நானும்
தள்ளிவிடுகிறோம் நம் காலத்தை
நானுண்டு என் வேலையுண்டு என்றபடியே நகரும்
என் நாட்களை கொத்தித்தின்னும் நீ
என்னித ஏன்டா புடிச்சி உருவுற

No comments:

Post a Comment