
வெறுமனே அறுபதை கடந்த எனக்கு
தோழா உன் பன்னூற்றாண்டு வயதின்
அறிவுத்தெம்பு எனக்குள்ளும் நீர்ச்சுனையாய்
அறைக்குள் அமர்ந்தவாறே உன் முகபடத்தை
நோக்கும் நொடியில் கசிகிறது
உயர்ந்த மலையின் அடிவாரத்தில்
உன் களப்பணியின் தொடக்கப்புள்ளி
உன் தம்மம் கேட்டு ஓலமிடும் மனிதர்கள்
தெருக்களில் திரிகிறார்கள்
மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டி
கண்டுகொள்ளப்படாத மனிதர்கள்
தோழா
உன் முகவரியை தொலைத்து நெடுங்காலமாகிவிட்டது
தந்துவிட்டுப்போ என் தலைமுறையின் ரத்தச் சிதறல்களை
கடிதாசி போடுகிறேன்
அந்த கடிதாசியில் இடம்பெறப்போகும்
மிருகங்களின் பெயர்களில்
மனித முகங்கள் தெரியும்
No comments:
Post a Comment