Saturday, April 3, 2010

என்னை நேசிக்க தெரிந்த தோழன் அவன்




வெறுமனே அறுபதை கடந்த எனக்கு
தோழா உன் பன்னூற்றாண்டு வயதின்
அறிவுத்தெம்பு எனக்குள்ளும் நீர்ச்சுனையாய்
அறைக்குள் அமர்ந்தவாறே உன் முகபடத்தை
நோக்கும் நொடியில் கசிகிறது
உயர்ந்த மலையின் அடிவாரத்தில்
உன் களப்பணியின் தொடக்கப்புள்ளி
உன் தம்மம் கேட்டு ஓலமிடும் மனிதர்கள்
தெருக்களில் திரிகிறார்கள்
மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டி
கண்டுகொள்ளப்படாத மனிதர்கள்
தோழா
உன் முகவரியை தொலைத்து நெடுங்காலமாகிவிட்டது
தந்துவிட்டுப்போ என் தலைமுறையின் ரத்தச் சிதறல்களை
கடிதாசி போடுகிறேன்
அந்த கடிதாசியில் இடம்பெறப்போகும்
மிருகங்களின் பெயர்களில்
மனித முகங்கள் தெரியும்

No comments:

Post a Comment