ஓங்கி அரைந்ததில் குழம்பிப்போன உனக்கு
இன்னும் தெளிந்திருக்க வாய்ப்பில்லை
கீத்தை விலக்கி நுழையும் முகங்களில் நானும்
அரிதாரத்தை அப்பிப்பூசி ராஜ நினைப்பில் மையிடும்
கடங்காரக் கூத்துக்காரனை நோட்டமிடும் என் பார்வையும்
முட்டிக்கு கீழே தொங்கும் என் தந்தையின் முழுச்சட்டைக்குள்
அடைந்து கிடக்கும் என் உடலும்
முட்டிக்கும் மேல் மடித்துக்கட்டிய என் கைலியும்
சித்திர விழாவை மெருகூட்டும் உயிர்ப்பொம்மை
என்னை மட்டும் தடுக்கும் உன் கரங்களில் பூட்டப்பட்ட
சாதிவிலங்கு என் முகத்திற்கு திரையிடும்
கொடிய நினைப்பை முறிக்கும்
கட்டியங்காரனின் சலங்கை சத்தத்தில்
யாருக்கும் கேட்டிடாத எனது அரையை
உன் மீசையை முறுக்கியவாறே மறைத்துப் போ
No comments:
Post a Comment