Saturday, April 3, 2010

அது உளவியல் நோய் என்பதாக குறிப்பு



அடிக்கடி ஆறாம் அறிவு பழுதடையும்
அவனுக்கு புத்தி தெளிய கொஞ்ச நாட்களாகும்
நேற்று முளைத்ததல்ல அது
ஆயிரமாண்டு வருட கணக்கில் நீளும்
கட்டிகாக்கப்பட்ட வர்ணக்குழிகள்
சிக்கி மீள நாட்களாகும்
ஜென்ம புத்தி எதாலடித்தாலும் போகாது
அது உளவியல் நோய் என்பதாக சொல்லப்பட்டும்
குணப்படுத்திக்கொள்ள நோயாளி
நோயை உணரும்படி இல்லை
நோய்வாய்ப்பட்டு தெருமுனையில் சுத்தும்
அந்த நாயை கண்டால் பாவம் மேலெழும் எனக்கு
மருந்திடும் துடிப்பு
நோய் கண்டும் நாய் நாயாகவே சுத்துகிறது
கத்திப்பட்டது எம்மேல
கருஞ்சாந்துப்பட்டது எம்புள்ள மேல

No comments:

Post a Comment