புத்தியுரைத்திட்ட உன்னை கூட
மாத்தியுரைத்திட்ட பாவிகள்
ராத்திரியோடு ராத்திரியாக
எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்
எதைக்கண்டாலும்
பட்டையையும் நாமத்தையும் போட்டவர்கள்
அதை எல்லோருக்கும் போட்டுவிட்டார்கள்
மிஞ்சிய எச்சம் கூட
நாங்கள் நூல்பிடித்து நகரும் துருப்புச்சீட்டு
வெட்டுகிற இடத்திலெல்லாம் தட்டுப்படும் உன் தலைகள்
அரசில்லத்திலெல்லாம் உன் உருவச்சிலைகள்
புத்த தேசத்தின் கைக்குழந்தைகள் நாங்கள்
கோய்ந்தா போட மட்டும்
எங்களை வளைத்து போட்ட கூட்டங்களிலிருந்து
தப்பிக்கமுடியாமல் தவிக்கிறது என் சமூகம்
இரட்சிக்க வந்தவன் சான்றிதழ் கேட்டு
ஆசிர்வதிக்க கூட மறந்துவிட்டான்
தொன்மை காலத்திலிருந்து தொடரும் வாழ்க்கை
உன் நினைவுகளில் கரைகிறது
உன் அடையாளங்களை கண்டபடியே
தடம் தேடி பதியும் எங்களை துரத்துகிறதுதூரத்திலிருந்து கேட்கும் கொரைக்கும் சத்தம்
No comments:
Post a Comment