Friday, April 16, 2010

சுவடுகளில் தடம் பதியும்







புத்தியுரைத்திட்ட
உன்னை கூட
மாத்தியுரைத்திட்ட
பாவிகள்
ராத்திரியோடு ராத்திரியாக
எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்
எதைக்கண்டாலும்

பட்டையையும் நாமத்தையும் போட்டவர்கள்
அதை
எல்லோருக்கும் போட்டுவிட்டார்கள்

மிஞ்சிய
எச்சம் கூட
நாங்கள்
நூல்பிடித்து நகரும் துருப்புச்சீட்டு
வெட்டுகிற
இடத்திலெல்லாம் தட்டுப்படும் உன் தலைகள்
அரசில்லத்திலெல்லாம் உன் உருவச்சிலைகள்
புத்த
தேசத்தின் கைக்குழந்தைகள் நாங்கள்
கோய்ந்தா
போட மட்டும்
எங்களை வளைத்து போட்ட கூட்டங்களிலிருந்து
தப்பிக்கமுடியாமல் தவிக்கிறது என் சமூகம்
இரட்சிக்க
வந்தவன் சான்றிதழ் கேட்டு
ஆசிர்வதிக்க
கூட மறந்துவிட்டான்

தொன்மை
காலத்திலிருந்து தொடரும் வாழ்க்கை
உன்
நினைவுகளில் கரைகிறது
உன்
அடையாளங்களை கண்டபடியே
தடம் தேடி பதியும் எங்களை துரத்துகிறதுதூரத்திலிருந்து கேட்கும் கொரைக்கும் சத்தம்

No comments:

Post a Comment