Wednesday, April 7, 2010

பெரிய பல்கலைக்கழகமொன்றில் அவன் சிரத்தையான ஆய்வாளன்



அடிமையாய் வாழ்ந்துவிட்ட அம்மாவுக்கு தெரியப்போவதில்லை
பட்டணத்துக்கல்லூரியில் ஆய்வு செய்யும் மகன்
வாத்தியின் பையை தூக்கியும்
இடைவேளையிலும் தேவைப்படும்போதும் டீ வடை ஏந்தி
விசுவாசமான அடிமையாய் நடந்துகொள்வதும்

ஆய்வு காலங்களில் வாத்தியின் பையை தூக்கினால்போதும்
வழிகாட்டுதல் பேரில் கொன்றுவிடும்
மனிதநேயமிக்க அதுகள் வாத்தி

வாத்தி வீட்டு வேலை முடிந்து களைப்பாறும் முன்
ஆய்வு காலம் கடந்துவிடும்
அடுத்து வரும் காலங்கள் கண்டபடி கொரைக்கும்

நல்ல அடிமை சிக்கியதில் மெதப்போடு அவனும்
தன்னை பீத்திக்கொள்ளும் சுயபுராணக்காரன்
சோம்பேறியாய் சுத்திவிட்டு
ஆய்வாளன் சேகரிப்பின் தரவுகளை கைப்பற்றியபடி
எழுதும் கட்டுரைகள் அவனின் ரத்தத்தை சுரண்டும்
ஏதோ ஒரு மூலையில் நன்றியுடன் குறிக்கப்படும்
அவனின் பெயருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும்
நூலகத்தில் அவன் புரட்டிய புத்தகத்திலிருந்து
அவன் மூக்கிலேரிய நெடி

ஆய்வாளன் பேரில் ஒரு அடிமையும்
வழிகாட்டி போர்வையில் மனித ரத்தத்தைச் சுரண்டும் ஒரு மிருகமும்
வாழ்ந்து முடிந்துவிடும் நாட்கள்
அவனின் குறிப்பேடுகளில் பதிக்கப்படும் அடிமைக்காலம்

எதுவுமே தெரிய வேண்டாம் அம்மாவிற்கு
அவனும் இங்கு சாணியை வாருகிறான்

No comments:

Post a Comment