Friday, April 9, 2010

ஒன்றன் மீது ஒன்றாய்

உடலசைவின் மொழிகளை அதன் பொருளை
பொத்தி காக்கும் இந்த மண்ணில்
கால்களை நீட்டவோ மடக்கவோ குறுக்கவோ முடியாமல்
தவிக்கிறது கால்களும் மனமும்
கால் மேல் கால் போடும் காட்சியை ஏறெடுத்து பார்க்கும் கண்கள்
மொறைத்துப் பார்க்கும் பூசணிக்காயில் வரையப்பட்ட பொம்மை
தேவையற்று உன்னை மிதிக்கவோ உதைக்கவோ உரிமையற்ற கால்கள்
சலனமின்றி அதன் மீது அது ஏறி கிடக்கும்
முள்ளின் தடத்தில் பூக்களின் பாதையில்
எனக்காக நடக்கும் என் கால்கள்
ஒருபோதும் எனக்காக மாரடிக்கப்படாத உன் கால்கள்

No comments:

Post a Comment