வண்ணம் தீட்டப்படாத அந்த வெள்ளை ஏடுகளில்
எதை கிறுக்கினாலும் எதையோ பெருசா எழுதி கிழித்ததாக
மூன்றாந்தெருவுக்கு கடிதாசியை சுமக்கும் அவளுக்கு
எல்லாவற்றைவிடவும் வெத்துத்தாள்களில் கைநாட்டிடநன்றாகவே கற்பித்திருந்தான் மூப்பநூர் பண்ணை
கிழிந்து போன சேலைகளுக்கிடையில்
சிக்கித்தவிக்கும் அவள் காலங்களையும்
கன்னக்கோல் வைத்தான் வாண்டையூர் பண்ணை
எதை பெரியதாக எழுதி கிழித்துவிட முடியும்
வெறும் வெற்றுக்கிறுக்கல்கள் அவை
காமநகங்கள் முதுகில் கீறவும்
வைக்கோலில் தள்ளி முட்டி தூக்கி
பண்ணையின் கொட்டையில் எட்டி உதைத்ததும்
அவன் அலறலின் சத்தத்தில் மொளக்குச்சியை
புடிங்கி ஓடும் மாடு
இன்னவும் இன்னபிறவும் கிறுக்கப்படாதஇந்த கடிதாசியில் எதுவுமே இல்லை
எதை கிறுக்கினாலும் எதையோ பெருசா எழுதி கிழித்ததாக
மூன்றாந்தெருவுக்கு கடிதாசியை சுமக்கும் அவளுக்கு
எல்லாவற்றைவிடவும் வெத்துத்தாள்களில் கைநாட்டிடநன்றாகவே கற்பித்திருந்தான் மூப்பநூர் பண்ணை
கிழிந்து போன சேலைகளுக்கிடையில்
சிக்கித்தவிக்கும் அவள் காலங்களையும்
கன்னக்கோல் வைத்தான் வாண்டையூர் பண்ணை
எதை பெரியதாக எழுதி கிழித்துவிட முடியும்
வெறும் வெற்றுக்கிறுக்கல்கள் அவை
காமநகங்கள் முதுகில் கீறவும்
வைக்கோலில் தள்ளி முட்டி தூக்கி
பண்ணையின் கொட்டையில் எட்டி உதைத்ததும்
அவன் அலறலின் சத்தத்தில் மொளக்குச்சியை
புடிங்கி ஓடும் மாடு
இன்னவும் இன்னபிறவும் கிறுக்கப்படாதஇந்த கடிதாசியில் எதுவுமே இல்லை
No comments:
Post a Comment