Monday, April 19, 2010

இறக்கிவைக்கப்பட்ட சிலுவை சுமக்கும் இவர்கள் ஏசுபிரான் அல்ல



சாதித்திமிரோடு பாதிரியார் நடந்தால் போட்டுத்தள்ளிடு
கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம்
மறுத்தால் கர்த்தருக்கும் தலை இருக்காது

ஒடுக்கும் வெள்ளையனின் உறவை முறித்திட
கிருஸ்துவத்தை துறந்து
மதம் மாறினான் மால்கம் எக்ஸ்
நாய்கள் துரத்துவதினால்
உன் கிறிஸ்துவக்குழிக்குள் பதுங்கிவிட்டோம்
மன்னித்துவிடுகிறோம்
எங்களை காட்டிக்கொடுத்த ஏசுபிரானை

அப்பத்தையும் ரசத்தையும் காட்டி ஏமாற்றிவிட்டு
தூரத்தில் போகும் அந்த ஒளி யாருடையது
செத்தவன் உயிர் பிழைத்திருக்கக்கூடும்

சிலுவையில் அறையப்பட்டவன்
பாரம் சுமக்க முடியாமல்
சேரியின் முதுகில் இறக்கிவைத்திருக்கிறான்
அவன் ஓய்வெடுக்கும் வரை
முதுகு வளைந்து கிடக்கும்

No comments:

Post a Comment