Thursday, April 22, 2010

நெருடல்

வேகமாய் நடந்தபோது மறதியால் தொடங்கியது
இன்னும் சுற்றுகிறது காலை
எனக்குள் மாற்றம் ஒன்றை கண்டுவிட்டதில்
விருப்பம்கொள்ளாமல் எரிச்சலடையும் அது
நீட்டுகிறது பொணங்கொத்தி மூக்கை
பார்த்தபோது கும்புடுபோட மறந்துவிட்ட கைகள்
மறுத்து இணைகிறது எதையும் எதிர்க்கும் தெம்பில்

நாங்க அப்படியாக்கும் இப்படியாக்கும்
பழைய புராணத்தில் காலத்தை தள்ளிடும்
பரம்பரை பவுசு விட்டத்தில் குந்தி காலாட்டும்
சோத்துக்கே இல்லாமல் சிங்கியடிக்கும்போது
தலைக்கு ஏறும் சாதிப்பெருமை

மண்டையோட்டில் இழுத்தடிக்கப்பட்ட ஆணி
புடுங்க முடியாமல் கிடக்கிறது
பதுவுசாய் பார்த்துக்கொள்ளட்டும்
அது அவன் பாட்டன் பூட்டனின் சொத்து

No comments:

Post a Comment