வயித்தெரிச்சலுடன்
எங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று புலம்பும்
இந்த சூத்திரர்கள் அதீத மேதாவிகள்
களிமண் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும்
மண்டையை மூடிமறைக்கும் சாமார்த்தியக்காரன்
புறாவின் றெக்கை மிதித்து பறக்கவிடும் வேடன்
எய்திய அம்பை புடுங்கும் திராணியற்று
பட்டறையில் வார்க்கப்பட்ட அறிவுஜீவி
மண்ணோடு சேர்த்தரையப்பட்ட புறாவொன்றை
பறக்கச்சொல்லி வேடிக்கைப் பார்க்கும் அறிவுஜீவிகள்
எப்பொழுது தூக்கிப்போடுவார்கள்
ஏற்கனவே செத்துவிட்ட புறாவை
றெக்கை முளைத்து வானம் வரை பறந்துவிடும்
புறாவின் திசையில் பறக்க பழகிவிட்டன அம்புகள்
இரத்தத்தால் பூசப்பட்டிருக்கும் வேடனின் முகங்கள்
காய்ந்துவிடாமல் பிசுக்கும் சிவப்பூற்று
எங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று புலம்பும்
இந்த சூத்திரர்கள் அதீத மேதாவிகள்
களிமண் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும்
மண்டையை மூடிமறைக்கும் சாமார்த்தியக்காரன்
புறாவின் றெக்கை மிதித்து பறக்கவிடும் வேடன்
எய்திய அம்பை புடுங்கும் திராணியற்று
பட்டறையில் வார்க்கப்பட்ட அறிவுஜீவி
மண்ணோடு சேர்த்தரையப்பட்ட புறாவொன்றை
பறக்கச்சொல்லி வேடிக்கைப் பார்க்கும் அறிவுஜீவிகள்
எப்பொழுது தூக்கிப்போடுவார்கள்
ஏற்கனவே செத்துவிட்ட புறாவை
றெக்கை முளைத்து வானம் வரை பறந்துவிடும்
புறாவின் திசையில் பறக்க பழகிவிட்டன அம்புகள்
இரத்தத்தால் பூசப்பட்டிருக்கும் வேடனின் முகங்கள்
காய்ந்துவிடாமல் பிசுக்கும் சிவப்பூற்று
No comments:
Post a Comment