
அரசமர பள்ளிக்கூடத்தில்
உன்னிடம் பாடம் கேட்டுவளர்ந்த குழந்தைகள்
சுவாசத்திற்காக கார்பன் -டை -ஆக்சைடு
அடைத்து வைக்கப்பட்ட கூடாரத்தில்
நினைவுகளற்று செத்தப்பிணங்களாய் உறங்குகின்றன
மூச்சு முட்டும் நெஞ்சடைத்து கண்கள் மிரளும்
ஆக்சிஜன் கேட்டு துடிக்கும் வாய்களுக்கு
அரசமரத்திலிருந்து உதிரும்
இலை ஒன்று அதிர்ந்து பரவும்
அந்த கூடாரத்தின் சல்லடை ஓட்டைகளில்
நீர்கொண்டு நிரப்பும்
உடைக்கப்படும் அந்த கூடாரத்தில்
அரசஞ்செடி குருத்து வேண்டி
பறவைகள் எச்சமிடும்
இன்னும் ஆக்சிஜன் கேட்டு அலைகிறது மூச்சுக்குழல்
அந்த கூடாரத்தின் சல்லடை ஓட்டைகளில்
நீர்கொண்டு நிரப்பும்
உடைக்கப்படும் அந்த கூடாரத்தில்
அரசஞ்செடி குருத்து வேண்டி
பறவைகள் எச்சமிடும்
இன்னும் ஆக்சிஜன் கேட்டு அலைகிறது மூச்சுக்குழல்
No comments:
Post a Comment