Wednesday, April 14, 2010

மண் பிளந்து நுழையும் வேர்கள்

மரணம் தொரத்துவதும் மரணத்தை தொரத்துவதும்
சுழலும் வாழ்க்கைக்கு புளித்துப்போய்விட்டது
அந்தரத்தில் தொங்கியபடியே
மல்லாக்க விழுந்து புரண்டு குப்புரக்கிடக்கும்
கரப்பான் பூச்சியின் மீசை மசுறில்
மண் எதுவும் ஒட்டிவிடாத சாதிப்பெருமை
குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையோட்டி
பழகிவிட்ட வாழ்க்கைக்கு பலியாக்கப்படும்
மனித ஜீவன்கள்
அவர்களின் மூளையைச்சுற்றி பின்னியுள்ளஇரும்பு கம்பிகள் அதிகச்சூட்டில் உருக்கப்படும்
விரியும் சிந்தனை கம்பிகள் நொறுங்கும்
அப்பொழுது ராட்சச மிருகமொன்று அமிக்கி வாசிக்கும்

No comments:

Post a Comment