Monday, January 30, 2012

தரமான இலக்கியம்

நாங்கள்
எழுதும் இலக்கியங்களில்
எங்கள்
வலிகளை, வேதனைகளை
அழுகைகளை அவர்களுக்குப்
பிடித்தாற்போல் அப்படியே
பதிவு செய்ய வேண்டுமாம்…

எங்களின் கோபம், எரிச்சல்
எதிர்ப்பு
எதுவும் இடம்பெறக்கூடாதாம்
அதை.. அவர்கள்..
இலக்கியத் தரம், ரசணை
கோட்பாட்டு வடிவங்களின்
அலகுக்குள் வைத்து
எடைபோடுவார்களாம்.

உலகத் தரம் வாய்ந்த
இலக்கியங்களை உருவாக்குவது
எங்களின் நோக்கமல்ல என்பதை
முதலில் நீங்கள் புரிந்துகொள்ளாதது…

இது இலக்கியமாகவும் இருக்கலாம்
எதுவாகயிருப்பினும்
உங்கள் இரக்கத்தைக் கோரவில்லை
எங்கள்
எதிர்ப்பைத் தெரிவிக்கிறது…

No comments:

Post a Comment