Saturday, May 14, 2011
வழக்காற்றுக்கதை : சிவன் - பார்வதி - மூன்றுதலை பிரம்மா
அத்தனையும் அழகு அவளுக்கு
ஒன்றுவிடாமல் எல்லாம் கச்சிதம்
பெயரைக் கேட்டாலே
உமுனி முழுங்கும் பேரழகி
அவளை நினைக்கையில்
அத்தனைபேரும் பூமிக்கு பாரமாய்
கவுந்தடித்துப் படுத்தவர்கள்...
அவள்
சிவனுக்கு பொண்டாட்டியானாலும்
ஊர்க்கண்ணை உறுத்தியவள்.
எத்தனை நாள் பட்டுத்தெரித்தாள்
பிரம்மாவின் கண்ணில்
பார்வதியைப் பார்க்கும்பொழுதெல்லாம்
நினைத்துக்கொண்டான் ஏதோ ஒன்றை...
நாள் பார்த்தான்
ராத்திரியில் சிவன்
வெளியே செல்லும் நேரம் குறித்தான்
தக்கச்சமயம் பார்த்து
நெருங்கிவிட்டான் பார்வதியை...
வந்தவன் பிரம்மா என்றறிந்தாள்
எதற்காக வந்தான்
கேட்டுக்கொள்ளாமலேயே தெரிந்துகொண்டாள்.
தொடங்கிவிட்டான் லீலைகளை...
கடந்த காலங்களின் தாகத்தை
நிகழ்காலத்தின் மீது இறக்கிவைத்தான்...
வியர்வைச் சொட்ட சொட்ட
எல்லாவற்றையும் சுமந்தபடி
நீடித்திருக்கவே விரும்பினாள் தேவதை...
எல்லாம் ஆடி அடங்கிப்போய்விட்ட நேரத்தில்
தட்டல் சத்தம்
கதவைத் திறக்கத்தான் தாமதம்
உள்ளே வந்த சிவனுக்கு
சாவுமணியோசை
சங்கூதும் சத்தம்
காதில்பட்டு நுழைந்தன மூளைக்குள்
இருட்டறைக்குள் மிரண்டு கிடந்தன
அவன் கண்கள்
"நிர்வாணக் கோலங்களில்
புணர்ந்து கிடந்தன உடல்கள்"
எத்தனைச் சுருக்காய்
துண்டக்காணும் துணியக்காணும்
ஓடிவிட்டான் பிரம்மா.......
ரத்த நாளங்கள் வெடித்து கிளம்பின
"நானிருக்கையில் அவனா?"
பயப்படவில்லை பார்வதி
பதட்டமாகத்தான் சொன்னாள்
"நான் அது நீயென்றிருந்தேன்"
ஊசிகள் மண்டைக்குள் குத்தின
குழம்பினான்
"அவனெப்படி நானாக முடியும்"
ராத்திரியிருட்டில்
எதுவுமே தெரியவில்லை எனக்கு
தடவிப்பார்த்தேன் தலைகள் நான்கு
நீதானென்று நினைத்தேன் நான்...
தலைகளால் வந்ததா பிரச்சனை
எனக்கும் தலைகள் நன்கு
அவனுக்கும் தலைகள் நான்கு
இதுதாமன் உன் குழப்பமா உமையவளே...
தலைகளைத் தடவிப் பார்த்தா
நானென்று நினைத்தாய்
இனியெதற்கு உனக்கு குழப்பம்
சினந்தான் சிவன்
தேடிப்பிடித்து வெட்டினான்
பிரம்மாவின் தலைகளில் ஒன்றை...
ஒருதலை போயி
அடைமொழி வந்தது
'மூன்றுதலை பிரம்மா'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment