Tuesday, May 4, 2010

மனிதர்கள் நிறைம்பிய வீதிகளில்



மழை பெய்த நாளொன்றில்
சிக்கிக்கொண்ட அந்த வீதியில்
எந்த கூரையின் கீழும் அண்டாமல்
மழையின் கூடாரத்தில் தங்கிவிட்ட மனம்
நனைந்து அவனோடு கைகோர்த்துக்கொண்டது
தொட்டுப்பழகத் தெரிந்த
அவன் எனக்கொரு புதிய நண்பன்
தொடுவதில் உள்ளர்த்தமற்று பேசும் நவீனத்தோழன்

மழை பெய்த நாளொன்றில்
ஒதுங்கிக்கொண்ட குடிசையிலிருந்து தொடுகிறேன்
மூங்கில் வழியாய்ச் சொட்டும் நண்பனை
யார் பெத்த புள்ளையோ சாரலில் நிக்குது
கவலையோடு பரிமாறிய
அந்த பறைச்சியின் கையிலிருந்து
புடிங்கித் தின்ன ஒரு துண்டு மாட்டுக்கறியில்
விக்குகிறது அழுகுரல்

No comments:

Post a Comment