அபகரித்ததை
தொலைந்ததென்று விட்டிருக்கலாம்
வஞ்சகர்களுக்கு பஞ்சமி நிலத்தை
நாம் பிச்சையிட்டோம்
என்று இருந்திருக்கலாம்
நாய்களுக்கு உண்டைச்சோறு
உருட்டி வைத்தோம்...
காக்கைகளுக்கு எச்சச் சோறல்ல
பந்திச்சோறு பரிமாறினோம்.
நிலம் மயிறுக்குச் சமம்
நீள்குறியில் வடியும்
வேர்வைக்கு நிகர்
இழந்துவிட்ட உங்களை எப்படி
மீட்டெடுப்பேன்....
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
யாம் ஏழுமலையும் உடையேம்
ஜான் தாமஸையும் உடையேம்..
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவிலும்
எம் நிலத்தை பிறர் கொண்டார்
யாம் ஏழுமலையும் இலமே
ஜான் தாமசும் இலமே...